இதன்படி நாளை மறுதினம் கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் நேற்று (12) அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.