கொரோனாவை பொருட்படுத்தாது அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவை பொருட்படுத்தாது அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள்!

File Photo
ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் மற்றும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு வெளியில் வரும் குறுகிய தூர மற்றும் நீண்ட தூர பேருந்துகளில் ஆசன எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகள் கொண்டு செல்லப்பட்டமை காணப்பட்டது.

பேருந்து கட்டணத்தை 17% அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சங்கங்களும் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல தீர்மானித்துள்ளன.

ஹட்டன் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அந்த பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிக்க ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.