ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு!


ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென சரிந்ததுடன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.


காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காபூலுக்கான இலங்கைத் தூதுவர் தனிப்பட்ட விடுமுறையில் இலங்கை திரும்பியதால், தூதரகம் செயற்படவில்லை என்று தெரியவருகிறது.


இதன்படி, காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்த பரிந்துரைரைக்கு அமைய  ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தூதரகம் மூடப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.