இனி எவ்வளவு எரிபொருள் கிடைத்தாலும் மின்னெருக்கடி முடிவுக்கு வராது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி எவ்வளவு எரிபொருள் கிடைத்தாலும் மின்னெருக்கடி முடிவுக்கு வராது!!

சௌமிய குமாரவடு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி முழு மின் உற்பத்திக்கு திரும்பினாலும் மின் நெருக்கடி முடிவுக்கு வராது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


பெப்ரவரி முதலாம் திகதி மின்சாரம் தடைப்படுவதால் களனிதிஸ்ஸ மற்றும் யுகதனவி அனல்மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் இதனால் 300 மெகாவோட் கொள்ளளவை இழக்க நேரிடும் எனவும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


நீர் மின் நிலையங்களின் மின் உற்பத்தி விரைவில் 5% ஆக குறையும் எனவும் அதன் பின்னர் எவ்வளவு எரிபொருள் கிடைத்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது எனவும் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது என்றார்.


கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இன்று ஒரு மணித்தியாலமும், நாளை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.