ஞானசார தேரருக்கும் அப்துர் ரவூப் மௌலவியிற்கும் இடையிலான சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசார தேரருக்கும் அப்துர் ரவூப் மௌலவியிற்கும் இடையிலான சந்திப்பு!


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரிற்கும் காத்தான்குடியினை தளமாகக் கொண்டு செயற்படும் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் மன்றத்தின் தலைவரான அப்துர் ரவூப் மௌலவியிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (21) வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பு ராஜகிரியவிலுள்ள ஞானசார தேரரின் விகாரையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவினையும் அப்துர் ரவூப் மௌலவி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.


அப்துர் ரவூப் மௌலவி தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 30 வருடங்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட பத்வா தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஆகியோரிடம் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மகஜரொன்று கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, அமரபுர நிகாயாவின் மகாநாயக்க தேரரையும் அப்துர் ரவூப் மௌலவி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.