மிக எதிர்பார்ப்புடன் இருந்த ஆசிரியர் -அதிபர் சம்பள முரண்பாட்டு நீக்கம் தொடர்பில் சுற்றரிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிக எதிர்பார்ப்புடன் இருந்த ஆசிரியர் -அதிபர் சம்பள முரண்பாட்டு நீக்கம் தொடர்பில் சுற்றரிக்கை வெளியானது!


ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தேசிய சம்பளம் மற்றும் சம்பள ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

51,682 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஜனவரி 03 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்யாத பட்டதாரிகளுக்கு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.