வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறு - மத்திய வங்கியின் ஆளுநர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறு - மத்திய வங்கியின் ஆளுநர்

அந்நிய செலாவணி வரத்து வழமைக்கு திரும்பியதும் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகனங்கள் மற்றும் டைல்கள் (Tiles) தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், நாட்டிலிருந்து பெருமளவிலான அந்நிய செலாவணி வெளியில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறைகள் மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் ஸ்திரத்தன்மையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.