இரகசியங்களை வெளியிட தயார் - மைத்திரி அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரகசியங்களை வெளியிட தயார் - மைத்திரி அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தம்மை கைது செய்யும் நோக்கில் பலர் பேசி வருவதாக முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், உரிய நேரத்தில் தாக்குதல் பற்றிய தகவல்களை தாம் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை தம் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆணைக்குழுக்கள் நிறுவியதாகவும் அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஆணைக்குழு பற்றி மட்டுமே பேசப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.