அறிமுகமானது 3998 ரூபாவுக்கு அத்தியாவசிய உணவுப் பொதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அறிமுகமானது 3998 ரூபாவுக்கு அத்தியாவசிய உணவுப் பொதி!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் அடங்கிய பொதியை, சதொச விற்பனையகம் மூலம் 3,998 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச விற்பனையகம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள், 1998 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன்மூலம், இந்தப் பொதியைப் வீட்டுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு வர்த்தக நிலையங்களில் 6,521 ரூபாவுக்கும் 5,834 ரூபாவுக்கும் 5,771 ரூபாவுக்கும் இந்தப் பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை செய்யப்படுகிறன.

ஆனால், தாங்கள் அதனை 3,998 ரூபாவுக்கு மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஒவ்வொரு பொதியிலும் நுகர்வோருக்கு ஆகக்குறைந்தது 1,750 ரூபா இலாபம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.