முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் கண்கெட்ட பின்னே சூரியன் உதித்த முஸ்லிம் சமூகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் கண்கெட்ட பின்னே சூரியன் உதித்த முஸ்லிம் சமூகம்!


அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக  முன்னால் நீதி அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள், முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் முஸ்லிம் சமூகம் தவற விட்ட பிழையை மனம் திறந்து மனப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.

பல வருடங்களாக முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்த போதிலும், இதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை உரிய தரப்பினர்  கவனத்தில் கொள்ளாமையினால் ஏற்பட்ட  விளைவே இன்றைய கவலையான நிலைக்கு காரணமாகும். 

இதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், உரிய தரப்புக்கள் இதன் பின் விளைவுகளையும், சந்தர்ப்பவாதிகள் மூக்கு நுழைப்பதையும் தடுக்கக்கூடிய வகையில் அவ்வப்போது கூடிய சீக்கிரத்தில்  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நீயா நானா என வரட்டு கெளரவங்களையும், அதிகாரங்களையும் பேசிப் பேசி குழுக்களாகப் பிரிந்து, பாரம்பரியங்கள்  போன்றவற்றை கையிலெடுத்து, ஆண்டாண்டு காலமாக விவாதித்தமையே  இன்று முஸ்லிம் சமூகம் தனியார் சட்ட உரிமையை இழப்பதற்கு முக்கிய காரணமாகும்.

இவற்றை ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு குழுவினரை சுட்டிக் காட்டி குற்றம் கூறினாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை முன்னை நாள் அமைச்சர் அவர்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் உண்மையை வெளிப்படுத்தினார் முன்னை நாள் அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்கள். சமூகத்தின் பொறுப்புக் கூற வேண்டிய தலைமைகள் விட்ட பிழையினால் வருங்காலத்தில் துன்பங்களை அனுபவிக்கப்போவது, இதனா‌ல் பாதிப்படையப் போவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமுமேயாகும்.
 
எனவே முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில்  கண் கெட்ட பின்னே சூரியனைக் காண தலைப்பட்ட முஸ்லிம் சமூகம் இது போன்ற ஏனைய விடயங்களிலாவது பாடம் படிக்குமா?

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.