நாட்டுக்கு எ‌ரிபொரு‌ள் இறக்குமதி செய்யும் முழு பொறுப்பும் IOC நிறுவனத்திற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டுக்கு எ‌ரிபொரு‌ள் இறக்குமதி செய்யும் முழு பொறுப்பும் IOC நிறுவனத்திற்கு!


இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் முழு உரிமையையும் IOCக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. செனவிரத்ன தெரிவித்துள்ளார். 


பெரேரா தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது,


நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு தொகையை IOC கொள்வனவு செய்து இலங்கைக்கு கொண்டுவரவுள்ளது. இதனால் CPC நிரப்பு நிலையங்கள் IOC இடமிருந்து தேவையான அளவை கொள்வனவு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.


ஜாதிக சேவக சங்கத்தின் பெற்றோலிய தொழிற்சங்க கிளையின் அழைப்பாளர் ஆனந்த பாலிதவிடமும் இது தொடர்பில் வினவினோம்.


இந்தியா செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரேரணையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தாம் அறிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


பிரேரணையின் ஊடாக இலங்கைக்கு எரிபொருளைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லாததால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் விநியோகத்தை இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.


இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எரிபொருளின் இலாபத்தை இலங்கை இழக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது குறித்து லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தாவிடம் கேட்டபோது, ​​அப்படியொரு திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.


இது தொடர்பாக அமைச்சர் உதய கம்மன்பிலவிடமும் கேட்டறிந்தார். அப்படியொரு திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)


-lankacnews


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.