BREAKING: நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்!!

நாட்டில் சமையல் எரிவாயு சர்ச்சை இடம்பெற்று வரும் நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து எரிவாயு விநியோகங்களையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதேசமயம் நாடு முழுவதும் தமது விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடியவிடம் நாம் வினவிய போது, நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லையென தெரிவித்தார்.

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.