யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் சடலங்கள்! 06 ஆண்களின் உடல்கள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் சடலங்கள்! 06 ஆண்களின் உடல்கள் மீட்பு!


யாழ். மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.


பருத்தித்துறை - சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு - சுண்டிக்குளம் கடற்கரையிலும் நேற்று (02) இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.


நேற்று கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 06 நாட்களுக்குள் 06 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.


கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு - மணற்காடு மற்றும் வடமராட்சி - வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரைப் பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.


கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.


சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.