நாட்டில் இனி திரிபோஷா விநியோகம் இல்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இனி திரிபோஷா விநியோகம் இல்லை?


கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷா இடைநிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவை பெற முடியாததால் திரிபோஷா உற்பத்தியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.


 2021 ஆம் ஆண்டு திரிபோஷா உற்பத்திக்காக வழங்கப்படக்கூடிய சோளத்தின் அளவு 570 மெட்ரிக் தொன் என மாவட்ட செயலாளர்கள் இலங்கை திரிபோஷா நிறுவனத்துக்கு அறிவித்துள்ளனர்.


அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலாளர்கள் வழங்கிய அறிக்கைகளிலிருந்து அந்தத் தொகை ஒரு வாரத்துக்கு மட்டுமே போதுமானது, தினந்தோறும் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவு 70 மெட்ரிக் தொன் ஆகும்.

advertise here on top

தேவையைப் பூர்த்தி செய்ய முடியாததால் 10,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஓகஸ்ட் 24ஆம் திகதி அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை 2,500 மெற்றிக் தொன் சோளம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான 720 மெற்றிக் தொன் பால் மாவை வழங்க முடியவில்லை.


பால் மாவின் விலை கிலோவுக்கு 225 ரூபாவினால் அதிகரிக்கப் பட்டுள்ளதன் காரணமாக பால் மாவை 1,145 ரூபாவுக்கு வழங்க முடியும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.