பஸ்ஸில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கு கௌரவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்ஸில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கு கௌரவிப்பு!


பஸ் வண்டியில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனர் கௌரிவிக்கப்பட்டனர்.


வவுனியா - யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டியில் பயணித்த கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 5 பவுணுக்கு மேற்பட்ட தாலிக்கொடி, வங்கி புத்தகங்கள் உட்பட்டவற்றை அந்த வண்டியில் தவறவிட்டிருந்தார்.


அதனை பார்வையிட்ட தனியார் பஸ் வண்டியின் நடத்துனர் கே.ஜீவானந்தபவன், சாரதி பி.கிறிஸ்டி ஆகியோர் கைவிடப்பட்ட குறித்த கைப்பையை வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

advertise here on top

அதனை உறுதிப்படுத்திய பின்னர் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து அந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதனையடுத்து குறித்த மனித நேயப்பணியினை முன்னெடுத்த சாரதி, நடத்துனர் இருவரும் பொது அமைப்புக்களால் இன்று கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டதுடன், நிகழ்வில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சிகையலங்கரிப்பாளர் சங்கம் உட்பட பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.