மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்ளாதவர் அரசியல்வாதியல்ல! -டியூ குணசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்ளாதவர் அரசியல்வாதியல்ல! -டியூ குணசேகர

 

டியூ குணசேகர

மக்களின் நாடித் துடிப்பை சரியாக அறிந்து கொள்ளாத ஒருவர் அரசியல்வாதியாக இருக்க முடியாது எனவும் அவ்வாறான ஒருவரால் நாட்டை ஆள முடியாது எனவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காமல் நாடு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் வழக்கமான கலந்துரையாடல்கள் இன்றி எந்தவொரு தலைவராலும் ஒரு நாட்டை ஆள முடியாது எனவும் அப்போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

நெருக்கடியில் உள்ள பிரச்சினைகளின் ஆழத்தை தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது அரசாங்கத்தை வெறுத்துள்ளதாக தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டு பலவந்தமாக அகற்றப்பட்டதை வரலாறு நிரூபிப்பதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.