திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி சூடு சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி சூடு சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!


திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, கடமை விடுப்பு தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குழு தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (24) இரவு 11.00 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட தொடர் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் OIC மற்றும் மூவர் காயமடைந்து தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.