இந்து ஆலயங்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளுடன் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்து ஆலயங்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளுடன் இருவர் கைது!


வடமாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் புராதன சிலைகள் மற்றும் பொருட்களை திருடி கடந்த 26 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த இருவரை தெல்லிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


சந்தேகநபர்களிடம் இருந்து 12 பழங்கால கற்சிலைகள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இருந்து சுமார் 100 வருடங்கள் பழமையான சிலைகள் மற்றும் ஏனைய பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பிலான விசேட விசாரணையின் போது சந்தேகநபர்களும் அவர்களது சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர்கள் இருவரும் இந்து ஆலயங்களில் இருந்து சிலைகளை திருடி இரகசியமாக கொழும்பு பகுதிக்கு கொண்டு சென்று பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி அந்த சிலைகளை கொழும்பு வர்த்தகர்களுக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சிலைகளை வாங்கியவர்களில் சிலர் பழங்கால வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதற்காக அவர்களது வியாபார இடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலைகளை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.


மேலும் இவ்வாறான பழமையான சிலைகளுக்கு வியாபாரிகளிடம் இருந்து கேள்வி அதிகரித்ததால், சந்தேக நபர்கள் சிலைகளை திருட தூண்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கீரமலே மற்றும் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.