எவ்வளவு பசித்தாலும் சிங்கம் புற்களை உண்பதில்லை! முருத்தெட்டுவே தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எவ்வளவு பசித்தாலும் சிங்கம் புற்களை உண்பதில்லை! முருத்தெட்டுவே தேரர்


என்ன தடைகள் வந்தாலும், எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புற்களை உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் நாரஹேன்பிட்டி அபயராம முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் குழுவொன்று ஆனந்த தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் தமது கையில் பட்டச் சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் அவர்களின் உரிமை  என்பதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.