அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக காணி மோசடி குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக காணி மோசடி குற்றச்சாட்டு!


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணி மோசடி செய்துள்ளதாக தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரஜீவி டி சில்வா எனும் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அரசு நிலங்களை அபகரித்துள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள அவர், இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.


எவ்வாறாயினும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சட்டத்தரணி மூலம் இவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்காக 50 கோடி ரூபாவை 14 நாட்களுக்குள் நட்டஈடாக செலுத்துமாறும், அவ்வாறு செலுத்தாவிடின் அதற்குப் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.