ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய ஷிராஸ் நூர்தீன் முக்கிய பதவிக்கு நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய ஷிராஸ் நூர்தீன் முக்கிய பதவிக்கு நியமனம்!


காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீனை 2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் 03 வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரிந்துரைகளுக்கு இணங்க பாராளுமன்ற சபை தீர்மானித்து ஷிராஸ் நூர்தீன் ஒரு முன்னணி சமூக ஆர்வலராகவும், மனித உரிமைகளின் தீவிர பாதுகாவலராகவும் பணியாற்றியதன் காரணமாக இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெரேரா, ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி தாசிம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த ஆகியோரை உள்ளடக்கிய காணாமற்போனோர் அலுவலகத்தின் மற்ற ஆணையாளர்கள்/உறுப்பினர்களின் வரிசையில் அவர் இணைவார்.

காணாமல் போனோர் அலுவலகம் 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் (திருத்தப்பட்ட) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனங்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்கக்கூடிய செயல்பாடுகளை அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.