பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் பலி!


பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹுங்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.


போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர (62) ஹுங்கம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கு அவரை தடுத்து வைக்கப்பட்ட அறையில் விழுந்துள்ளார்.


சந்தேக நபர் பின்னர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


சந்தேக நபரின் மரணத்தையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை ரன்ன பிரதேசத்தில் மறித்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.