எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டில் நடக்கப்போவது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டில் நடக்கப்போவது இது தான்!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்நாட்டு மக்களுக்கு உண்பதற்கு இருக்காது என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹா பருவத்திற்கான பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வேண்டிய போதிலும், தேவையான உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கரிம திரவ உரங்களை மட்டுமே இடுவதன் மூலம் நாட்டில் போதுமான அறுவடையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

மஹா பருவம் நாட்டின் மிக முக்கியமான மற்றும் அதிக அறுவடைக் காலம் என்றும், அந்தப் பருவத்தில் பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

விவசாயத் துறையில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.