மத்திய மாகாண ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மாகாண ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம்!


மத்திய மாகாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.


சுமார் 306 பேருக்கு நாளை மறுதினம் இவ்வாறு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவித்தல் கடிதமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


எனினும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்றும், இந்த நியமனங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.