கண்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; பெண் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; பெண் ஒருவர் பலி!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிதுரு வெல்ல சந்தியில் உள்ள வில்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வருவதாகவும், வசதிக்காக பல்லேகல பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாகவும் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்த பெண், டிசம்பர் முதலாம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டு பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி உயிரிழந்தார்.

பல்லேகல பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.