இரண்டு வயது குழந்தைக்கு தொடர் தாக்குதல்; தம்பதியினர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு வயது குழந்தைக்கு தொடர் தாக்குதல்; தம்பதியினர் கைது!


தொடம்கொட, புஹாபுகொட பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரின் 02 வயதுடைய குழந்தை ஒருவரை தொடர்ச்சியாக தாக்கியதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தம்பதியருக்குப் பிறந்த இ‌ந்த பெண் குழந்தையை தாக்கியதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தொடங்கொட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உறவினர் ஒருவரின் பராமரிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.