அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவிப்பு!

அனைத்து அரச துறை ஊழியர்களும் 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் அனைத்து அரச துறை ஊழியர்களையும் பணிக்கு அழைக்க தீர்மானித்துள்ளன.

அரச துறை ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, நிறுவன தலைவர்களுக்கு தங்கள் ஊழியர்களை குறிப்பிட்ட சதவீதத்தில் வரவழைக்க அதிகாரம் வழங்கப்பட்டது, மேலும் அந்த ஒழுங்குமுறை திருத்தப்படும். அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை முதல் தங்கள் வழக்கமான பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்”என்று அவர் பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரத்னசிறி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.