இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல நியமனம்!


இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணியுடன் மஹேல ஜயவர்தன இணைவதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் தகுதி சுற்று போட்டியில் அவரது பங்களிப்பே அணியின் முன்னேற்றத்துக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய நியமனம் இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண அணியில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.