எரிபொருள் விலை அதிகரிப்பை உடன் மேற்கொள்ளவும் - நிதி அமைச்சர் அறிவிப்பு : புதிய விலைகள் இவை தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை அதிகரிப்பை உடன் மேற்கொள்ளவும் - நிதி அமைச்சர் அறிவிப்பு : புதிய விலைகள் இவை தான்!

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என டிசம்பர் 10 ஆம் திகதி அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
advertise here on top

இதன்படி, பெற்றோல் 35 ரூபாவாலும், டீசல் 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்கப்பட்டு எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எனினும், இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இதேவேளை எதிர்கால எரிபொருள் தேவைக்கு போதுமான எரிபொருளை ஆர்டர் செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாமையால் கடன் கடிதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.