நாட்டில் நான்கு நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நான்கு நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு புறம்பாக செயற்பட்ட 04 நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


  1. New Natasha (Pvt) Ltd.), இல.12, சூப்பர் மாக்கெற் கொம்பிளெக்ஸ், வென்னப்புவ.
  2. George Michael Holdings (Pvt) Ltd.), இல. 157, சிலாபம் வீதி, வென்னப்புவ.
  3. Royal Money Exchange (Pvt) Ltd.), இல. 55, காலி வீதி, கொழும்பு 06.
  4. Prasanna Money Exchange (Pvt) Ltd.) இல. 57, காலி வீதி, கொழும்பு 06.


போன்ற தவறிழைக்கும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் அறிவித்தலின் மூலம் தொடர்பூட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய தவறும் சந்தர்ப்பத்தில், அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.


அத்துடன், வங்கிகளால் வழங்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை அதிகரிக்கும் அதிகாரம் நாணய மாற்று நிறுவனங்களுக்கு இல்லை எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.