advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய ஜெனரல் பிபின் ராவத் பலியானார்!


தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய இராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற ஹெலிகொப்டர், இன்று (08) பிற்பகல் விபத்துக்குள்ளாது.


குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.


ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்ததில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹெலிகொப்டரில் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர் என்றும் தெரியவந்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.