கண்டி - வத்தேகம சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஐந்து சிறுமிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - வத்தேகம சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஐந்து சிறுமிகள்!


கண்டி வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இந்த ஐந்து சிறுமிகளும் கடந்த 06ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.


தப்பியோடிய குழந்தைகளில் ஒன்று நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று (07) பிற்பகல் வரை 16-18 வயதுடைய ஏனைய நான்கு சிறுவர்கள் தொடர்பில் பொலிஸாரால் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இச்சிறுமிகள் புஸ்ஸல்லாவ, வத்தேகம மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


வத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் பரிசோதகர் பாலித இளங்கசேகர தலைமையில் சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.