அமெரிக்காவில் பலத்த சூறாவளி; 70க்கும் மேற்பட்டோர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவில் பலத்த சூறாவளி; 70க்கும் மேற்பட்டோர் பலி!


அமெரிக்காவில் கென்டகி, இல்லினாய்ஸ், ஒர்கன்சஸ் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.


அமெரிக்காவின் ஒர்கன்சஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசி மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இலட்சக்கணக்கான மக்கள் இருளில் தவித்தனர்.


கென்டக்கியின் மேபீல்ட் பகுதியில், சூறாவளி தாக்கியதால் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


டென்னசியில், சூறாவளி காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


டெபியன்ஸ் மற்றும் நியூ மெல்லே நகரில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்துள்ளனர்.


கென்டகியில் ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு பலர் சிக்கி கொண்டனர். அவரை மீட்கும் பணி விரைவாக நடந்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.