அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உட்பட இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உட்பட இருவர் பலி!

 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் மில்லனியாவிற்கு இடையில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் ஆண் ஒருவரும் அவரது வயது குறைந்த மகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மில்லனியாவில் 18 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பாதுகாப்பு வேலியில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் மற்றும் அவரது 04 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.