பேருவளையை சேர்ந்த 14 வயது சிறுமியை 32 வயது இளைஞன் கண்டிக்கு அழைத்துவந்து பலாத்காரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருவளையை சேர்ந்த 14 வயது சிறுமியை 32 வயது இளைஞன் கண்டிக்கு அழைத்துவந்து பலாத்காரம்!


பேருவளை, மாகல்கந்த பிரதேசத்தில் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரையும் அவரது தாயையும் பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து, பேருவளை பொலிஸார் சந்தேகநபரையும் அவரது தாயாரையும் கடந்த 28ஆம் திகதி கண்டி - தவுலகல பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


சிறுமியின் கையடக்கத் தொலைபேசிக்கு காணாமல் போன கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சுமார் மூன்று மாத காலப்பகுதியில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர், அதுவரை இருவரும் சந்தித்திருக்கவில்லை.


இதன்போது இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் குறித்த இளைஞன் தனது தாயுடன் கண்டி, தவுலகல பிரதேசத்தில் இருந்து மக்கொன எனும் பிரதேசத்துக்கு வந்து வாடகை அறையொன்றில் இரவைக் கழித்துள்ளனர். பின்னர் மறுநாள் காலை தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டு ஜன்னல் வழியாக வெளியேறிய சிறுமியை குறித்த இளைஞர் மற்றும் அவனது தாயார் அழைத்துச் சென்றுள்ளனர்.


இவ்வாறு கடந்த 25ஆம் திகதி குறித்த இளைஞரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


சிறுமி ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவள் மைனர் என்பதை அறிந்து குற்றவாளியான இளைஞனும் அவனது 70 வயது தாயும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.