இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய் தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மூவரையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய காவல்துறையினர் இவர்களை 48 மணிநேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.