உணவு மிச்சம் வைத்தார் என சுடுநீரை வாயில் ஊற்றி 11 வயது சிறுமிக்கு கொடூரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உணவு மிச்சம் வைத்தார் என சுடுநீரை வாயில் ஊற்றி 11 வயது சிறுமிக்கு கொடூரம்!


இரவு உணவை மிச்சம் வைத்ததாக கூறி சுடுநீரை 11 வயது சிறுமியின் வாயினில் சுடுநீரை ஊற்றி சித்திரவதை செய்த சித்தியை திரப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வலுக்கட்டாயமாக வெந்நீரை ஊற்றியதால் சிறுமியின் வாயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட சிறுமியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுமாறு சித்தி வலுக்கட்டாயப் படுத்தியதாகவும், கட்டையால் தாக்கி, சுடுதண்ணீரை வாயில் ஊற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணையின் போது சிறுமி தெரிவித்துள்ளனர்.


சிறுமியின் தாய் தந்தையை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுள்ளதுடன், சிறுமியின் தந்தை இரு குழந்தைகளுக்கு தாயான இந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.


சிறுமியின் தந்தை கொழும்பு பிரதேசத்தில் கொத்தனார் வேலை செய்து வருவதக விசாரணைகளின் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.