கோழி இறைச்சி 1000 ரூபாய்... முட்டை ஒன்று 50 ரூபாய்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோழி இறைச்சி 1000 ரூபாய்... முட்டை ஒன்று 50 ரூபாய்!!


கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை உள்ளிட்ட கால்நடை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் கோழிக்கறி மற்றும் முட்டை விலை கடுமையாக உயரும் என்றும் கூறுகின்றனர்.


எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழிக்கறி சுமார் 900-1000 ரூபாவாகவும், ஒரு முட்டை 40-50 ரூபாவாகவும் உயரும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாததால் கோழி தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நாட்டில் உள்ள பல கோழி மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் எனவும் கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்தார்.


இதனிடையே மீன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.