வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 வயது சிறுமி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 வயது சிறுமி பலி!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 08 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்து, கூரை வீட்டின் மீது இடிந்து விழுந்தது. வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸார் உடனடியாக மாத்தறை தீயணைப்புப் பிரிவினரை அழைத்து தீயை அணைத்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.