படல்கும்புர பசறை பிரதான வீதியின் அலுபொத பிரதேசத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவில் தூணொன்றுக்கு அருகில் உள்ள வெறிச்சோடிய காணியொன்றில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றினை படல்கும்புர பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கொழும்பு, டேம் வீதி பகுதியில் சூட்கேஸில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட உடலின் வழக்கின் பிரதான சந்தேக நபர் படல்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் மண்டை ஓடு பெண்ணுடையதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)