ரவுட்டருக்கு மின்னிணைப்பு ஏற்படுத்த முயன்ற சிறுவன் பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரவுட்டருக்கு மின்னிணைப்பு ஏற்படுத்த முயன்ற சிறுவன் பரிதாப பலி!


வீட்டு இணைய பாவனைக்கு பயன்படுத்தும் ரவுட்டருக்கு மின்னிணைப்பை ஏற்படுத்த முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று மாலை (06) பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லுனுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அலகொலகல, லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன், லுனுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.


பிரேத பரிசோதனைக்காக சடலம் லுனுகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் லுனுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.