VIDEO: ஹெரோயினுடன் சிக்கிய இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஹெரோயினுடன் சிக்கிய இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது தாக்குதல்!


அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, குருக்குராகம பகுதியில் பொலிஸார் மீது பிரதேசவாசிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை காப்பற்றுவதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 06 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.