மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று மோட்டார் சைக்கிள்களின் பதிவு சான்றிதழ்களை மோசடியாகப் பதிவு செய்தமை மற்றும் அதற்குரிய ஆவணங்களை அச்சடித்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.