சுமார் 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை எனவும் 20 ஆண்டுகள் கடன் காலம், 07 ஆண்டுகள் கருணை காலம் எனவும் இதற்கு இரண்டு சதவிகிதம் வட்டி என ஒப்புக்கொண்டு இந்த கடன் தொகையை உகாண்டாவுக்கு வாரி வழங்கியது சீன அரசு.
இதனிடையே உகாண்டா தனது கடன் தொகையை செலுத்த இயலவில்லை என தெரிகிறது. கடனை திருப்பச் செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை (Entebbe International Airport) சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்த கடன் ஒப்பந்தத்தின் ஆபத்தான ஷரத்தாகும்.
இதனைத் தொடர்ந்து உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி உயர்மட்ட குழுவினரை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். அபாயகரமான அந்த ஷரத்தை நீக்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீனா தனது ஒப்பந்த விதிகளை தளர்த்த முடியாது என மறுத்திருக்கிறது.
இதன் மூலம் உகாண்டா தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகாண்டா கோர முடியாது என தெரிகிறது.
கடந்த வாரம் உகாண்டாவின் நிதியமைச்சர் மதியா கசாய்ஜா சீனாவுடனான கடன் ஒப்பந்த குளருபடிக்காக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)