PHOTOS: எரிபொருள் தாங்கி ஊர்தி வெடித்ததில் பலத்த சேதம்; 90க்கும் அதிகமானவர்கள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: எரிபொருள் தாங்கி ஊர்தி வெடித்ததில் பலத்த சேதம்; 90க்கும் அதிகமானவர்கள் பலி!


மேற்கு ஆபிரிக்க நாடான, சியேரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுன் பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 90க்கும் அதிகமானோர் பலியாகினர்.


சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன் அவர்களில் பலரினது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சியேரா லியோன் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ப்ரீடவுனுக்கு கிழக்காகவுள்ள புறநகரான வெலிங்டனில் எரிபொருளை ஏற்றிச்சென்ற தாங்கி ஊர்தியொன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதனால் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது.


பிந்திக் கிடைத்த தகவல்களுக்கமைய, இதுவரையில் 92 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், சியேரா லியோன் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.