நாட்டில் சிகரெட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சிகரெட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!


எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தின் விளைவாக இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றார்.

புகைபிடிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு விலை சூத்திரம் முன்வைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றும் கூறினார்.

இதன்படி, சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் ஐந்தாண்டுகளில் 20 ரூபாயால் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

தங்களால் தயாரிக்கப்பட்ட விலைச்சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்ட நபர்கள் புகைபிடிப்பதால் இறக்கின்றனர், அதே நேரத்தில் ஒரு வருடத்தில் 22,000 உயிர்களை நாங்கள் இழக்கிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.