ஹெம்மாதகம பகுதியில் இருந்து கம்பளை நகருக்கு மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, லொறியில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டுநரினால் கட்டுப்படுத்த முடியாத லொரி வண்டி, வீதியின் மேல் வளைவில் இருந்து அதே வீதியில் கீழ் வளைவில் அமைந்துள்ள 150 அடிக்கும் மேற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
லொரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மரக்கட்டைகள் ஆங்காங்கே சிதறி லொரி பலத்த சேதமடைந்தது. செங்குத்தான சரிவுகள் கொண்ட இந்த வீதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை மாவனல்லையில் இருந்து ஹெம்மாதகம, கம்பளை வரையான வீதியாக பலர் பயன்படுத்துகின்றனர். (யாழ் நியூஸ்)