சட்டவிரோதமாக வாகனங்களை எசம்பல் (ஒன்று கூட்டிய) செய்த நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக வாகனங்களை எசம்பல் (ஒன்று கூட்டிய) செய்த நபர்கள் கைது!

அத்துருகிரிய பொலிஸார் சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை கூட்டிச் செல்லும் மோசடியை முறியடித்துள்ளனர்.

இரகசியத் தகவலின் அடிப்படையில், மாலபே, கடுவெல வீதியில், சட்டவிரோதமான முறையில் (அசெம்பிள்) ஒன்று கூட்டி செய்யப்பட்ட மொண்டேரோ வகஒ ஜீப் ஒன்றை அதிகாரிகள் குழுவொன்று நேற்று கைப்பற்றியுள்ளது.

வாகனம் சட்டவிரோதமாக ஒன்றுசேர்க்கப்பட்டு, பதிவு செய்யப்படாத மற்றும் போலியான வாகன எண் தட்ட மூலம் இயக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் போது மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபர் டொயோட்டா பிரியஸ் கார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 38 வயதுடைய மாலபே மற்றும் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வழக்கு மீண்டும் 03 ஜனவரி 2022 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.