இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவா்கள் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளனர்.
எனினும் அதற்கான பதில் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச தரமதிப்பீடுகள் குறைத்துக் காட்டப்படுகின்றமை மற்றும் வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்தப்படாமை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வைக் காணுமாறு குறித்த வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.
கடந்த 20 மாதங்களில் இலங்கை மத்திய வங்கி, 2.9 ரில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளது.
இது ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன் பின்னர் நாணய அச்சிடலில் ஏற்பட்ட 37 சதவீத அதிகரிப்பாகும்.
இந்நிலையில் பொருளாதாரத்தை இயல்புக்கு கொண்டு வர இன்னும் 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரை செல்லும் என்றும் வர்த்தகர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை கடந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி, நாணயங்களை அச்சிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.