நாணய அச்சிடலை நிறுத்திய மத்திய வங்கி! முன்னணி வர்த்தகர்கள் பசிலிடம் முன்வைத்த கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாணய அச்சிடலை நிறுத்திய மத்திய வங்கி! முன்னணி வர்த்தகர்கள் பசிலிடம் முன்வைத்த கோரிக்கை!


இலங்கையில் பொருளாதார நிலையை சீரமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துமாறு சுமாா் 20 முன்னணி வர்த்தகர்கள், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவா்கள் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளனர்.


எனினும் அதற்கான பதில் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச தரமதிப்பீடுகள் குறைத்துக் காட்டப்படுகின்றமை மற்றும் வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்தப்படாமை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வைக் காணுமாறு குறித்த வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.


கடந்த 20 மாதங்களில் இலங்கை மத்திய வங்கி, 2.9 ரில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளது.


இது ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன் பின்னர் நாணய அச்சிடலில் ஏற்பட்ட 37 சதவீத அதிகரிப்பாகும்.


இந்நிலையில் பொருளாதாரத்தை இயல்புக்கு கொண்டு வர இன்னும் 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரை செல்லும் என்றும் வர்த்தகர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதேவேளை கடந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி, நாணயங்களை அச்சிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.