குழந்தைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - பாடசாலை கல்வியை தொடர முடியாமல் போகும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - பாடசாலை கல்வியை தொடர முடியாமல் போகும் அபாயம்!

குழந்தைகள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்த அதிகரிப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, பெற்றோர்கள் செய்ய வேண்டியது, தங்கள் குழந்தைகளை ஆதரித்து, பாடசாலை கல்வியை சீராக வைத்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால், பாடசாலை கல்வியை தொடர முடியாமல் போகும் என்றும், எனவே குழந்தைகளின் கல்வியைத் தொடர பெற்றார்கள் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

குழந்தைகளையும் அவர்களின் கல்வியையும் பாதுகாப்பதற்காக தேவையற்ற பயணங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.